கோல்கட்டாவில் காங்கேயம் வேன் டிரைவர் குத்தி கொலை

காங்கேயம், வேன் ஓட்டிச் சென்ற டிரைவர், கோல்கட்டாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள படியூரை சேர்ந்த ரவிக்குமார் மகன் ராகுல், 25. இவர் வேனில் சரக்குகளை, வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று இறக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், கோல்கட்டாவுக்கு லோடு ஏற்றி வருவதற்காக, வேனில் சென்றுள்ளார்.

கோல்கட்டாவில் ஏற்பட்ட தகராறில், அங்கிருந்த நபர் ஒருவர் கத்தியால் ராகுல் கழுத்தில் குத்தியுள்ளார்.


இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோல்கட்டா ஹவுரா சிட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement