சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அரசு டாக்டர்கள் சாதனை

புதுச்சேரி : இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் மூன்று வாரங்களில், மூன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில், இரண்டு மூளைச்சாவு அடைந்தவர்கள்தானம் செய்த சிறுநீரகங்களை கொண்டு, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டது. அதே போல, உயிருள்ள உறவினர் ஒருவரின் சிறுநீரக தானம் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மருத்துவமனையில், மூன்று, வாரங்களில், மூன்று சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சையை, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர் சுதாகர், சிறுநீரக தலைமை மருத்துவர் குமார் ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.
இதில், உயிருக்கு போராடிய36 வயது பெண்,46 வயது ஆண் நபர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதிய நம்பிக்கை அளித்துள்ளது. மூன்றாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகணவர் தனது மனைவிக்கு, சிறுநீரகத்தை தானம் செய்தார்.
மேலும்
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு; ஒரு சவரன் 74,120!
-
நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்
-
ஈரானில் இருந்து இந்தியா திரும்பினர் இந்திய மாணவர்கள் 110 பேர்; அவர்கள் சொல்வது இதுதான்!
-
கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்