சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அரசு டாக்டர்கள் சாதனை

புதுச்சேரி : இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் மூன்று வாரங்களில், மூன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில், இரண்டு மூளைச்சாவு அடைந்தவர்கள்தானம் செய்த சிறுநீரகங்களை கொண்டு, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டது. அதே போல, உயிருள்ள உறவினர் ஒருவரின் சிறுநீரக தானம் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மருத்துவமனையில், மூன்று, வாரங்களில், மூன்று சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சையை, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர் சுதாகர், சிறுநீரக தலைமை மருத்துவர் குமார் ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

இதில், உயிருக்கு போராடிய36 வயது பெண்,46 வயது ஆண் நபர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதிய நம்பிக்கை அளித்துள்ளது. மூன்றாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகணவர் தனது மனைவிக்கு, சிறுநீரகத்தை தானம் செய்தார்.

Advertisement