நேசமணி கபடி கிளப் போட்டி கடலுார் சாவடி அணி சாம்பியன்

கடலுார் : கடலுார் எம்.கே.எஸ். நேசமணி கபடி கிளப் சார்பில் 22வது மாநில அளவிலான கபடி போட்டி கடலுார் மஞ்சக்குப்பத்தில் நடந்தது. போட்டியில் தமிழகத்திலிருந்து 30அணிகளும், புதுச்சேரியிலிருந்து 10அணிகளும் பங்கேற்றன. ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடந்தது. இதில் கடலுார் உண்ணாமலை செட்டி சாவடி அம்மன் பிரதர்ஸ் அணி இறுதிப்போட்டியில் மஞ்சக்குப்பம் நேசமணி பிரதர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 40ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மஞ்சக்குப்பம் நேசமணி பிரதர்ஸ் அணி இரண்டாமிடமும், புதுவை குருவிநத்தம் செங்கதிர் நினைவு கபடி அணி மூன்றாமிடம் பிடித்தது. இரண்டாமிடம் பிடித்த அணிக்கு 30ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடித்த அணிக்கு 15ஆயிரம் ருபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
மேலும்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது