குளத்தை துார்வாரணும் விவசாயிகள் கோரிக்கை
உடுமலை : அந்தியூர் குளத்தில், கூடுதலாக தண்ணீர் தேக்க, ஆக்கிரமிப்புகளையும், முட்புதர்களையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை ஒன்றியம் அந்தியூரில், ஊராட்சி அலுவலகம் அருகில், குளம் அமைந்துள்ளது. பருவமழைக்காலத்தில், குளத்துக்கு நீர் வரத்து கிடைக்கிறது.
ஆனால், குளத்தின் நீர் தேக்க பரப்பு முழுவதும் புதர் மண்டி, நீர் வரத்து பாதையும் அடைபடும் நிலையில் உள்ளது. குளத்துக்கரையில் ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், மழைக்காலத்தில், முழு கொள்ளளவில், தண்ணீரை தேக்க முடிவதில்லை. அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமான குளத்துக்கான நீர் வரத்து பாதை, நீர் தேக்க பகுதி மற்றும் கரைகளில் புதர்களை அகற்ற வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது
Advertisement
Advertisement