அங்கன்வாடி குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீர் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
பொள்ளாச்சி : தொடர்மழையால், அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, குடிநீரை காய்ச்சி வடிகட்டி வழங்க வேண்டும் என, பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களும், தெற்கு ஒன்றியத்தில், 99 அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இங்கு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது, நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வடிகட்டி வழங்க வேண்டும்; மைய வளாகத்திற்குள் மழைநீர் தேக்கமடைவதைக்கண்டறிந்து தடுக்க வேண்டும் என, பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிர, இந்த மையங்கள் செயல்படும் கட்டடத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டடத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஏதேனும் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகள் இருந்தால், அதனை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது: தொடர்மழை காரணமாக, அங்கன்வாடி குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழக்கப்பட்டாலும் அதனை நன்கு காய்ச்சி ஆற வைத்து, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், குழந்தைகளுக்கு, சளி, இருமல், காய்ச்சல் என நோய் பாதிப்பு ஏற்பட்டால், பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்து, டாக்டரிடம் சிகிச்சை பெற பணியாளர்கள், அறிவுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினர்.
மேலும்
-
ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் கிடையாது; தமிழக அரசு திட்டவட்டம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
-
போர் பதற்றம் எதிரொலி; வெளிநாடுகளின் சேவையை 15 சதவீதம் குறைத்தது ஏர் இந்தியா
-
சோதனையின் போது வெடித்து சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
-
சோனியாவுக்கு தொடரும் சிகிச்சை: டாக்டர்கள் சொல்வது என்ன ?
-
திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது