வன்முறையில் இருந்து மாநிலம் விடுபட வேண்டும்: சொல்கிறார் மேற்கு வங்க கவர்னர்

கோல்கட்டா: மேற்குவங்கம் வன்முறையில் இருந்து விரைவில் விடுபடனும் என்று அம்மாநில கவர்னர் அனந்த போஸ் கூறினார்.
மேற்கு வங்க கவர்னர் சி.வி. அனந்த போஸ் ஏப்ரல் 19 அன்று முர்ஷிதாபாத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று திரும்பிய பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் தேதி தோள்பட்டை வலியால் கோல்கட்டாவை தளமாகக் கொண்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து மருத்துவர் பணிகளை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தலின் படி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று கோல்கட்டாவில் அனந்த போஸ் அளித்த பேட்டி:
எனது உடல்நிலை இப்போது நன்றாக உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கவலை அளிக்கும் நிலையில் உள்ளது. மாநிலம் விரைவில் வன்முறையில் இருந்து விடுபட வேண்டும். இந்த இலக்கை அடைய நாம் அனைவரும் ஓன்றிணைந்து செயல்படுவோம். மாநில கவர்னராக, வன்முறையைத் தடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
இவ்வாறு அனந்த போஸ் கூறினார்.
மேலும்
-
இஸ்ரேல் மருத்துவமனை; ஈரான் அணு உலை சேதம் ஏழாவது நாளாக நீடிக்கும் தாக்குதல்
-
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 4 பேர் மீது வழக்குப் பதிவு
-
மாஜி அரசு அதிகாரியிடம் மோதிரம் திருட்டு
-
அரிசியில் கிலோவிற்கு ரூ.7 கொள்ளை காங்., மாநில தலைவர் குற்றச்சாட்டு
-
மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கல்
-
விழிப்புணர்வு நிகழ்ச்சி