தாக்குதலில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை: இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம்: தாக்குதலில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை. ஈரானின் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனியும் ஒரு இலக்காக இருக்கலாம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேல்-ஈரான் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மத்தியில் இஸ்ரேல் அதிபர் இன்று ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளான தெற்கு இஸ்ரேலிய நகரமான பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவ மையத்திற்கு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நெதன்யாகு கூறியதாவது:

போரில் யாரும் விதிவிலக்கு இல்லாதவர்கள் என்று நான் அறிவுறுத்தல்களை வழங்கினேன். ஒரு போரின் போது, ​​வார்த்தைகளை கவனமாகவும், செயல்களை துல்லியமாகவும் தேர்ந்தெடுக்க வேண்டும்,

தனது நாட்டைக் காப்பாற்ற, அப்பாவி பொதுமக்களை குறிவைக்கும் அவர்களை போலல்லாமல், அதன் அணுசக்தி திட்டம் மற்றும் ஏவுகணை கிடங்கிற்கு எதிரானது தான் எங்களது நடவடிக்கை என்பதை மீண்டும் கூறுகிறேன்.

மக்கள் ஆபத்திலிருந்து தப்பிக்க முடியாத மருத்துவமனைகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.
சட்டத்தை கடைபிடிக்கும் ஒரு செயல்படும் ஜனநாயகத்திற்கும், கொலையாளிகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

இவ்வாறு நெதன்யாகு கூறினார்.

Advertisement