சேலம் அணி மீண்டும் ஏமாற்றம் * பிரேம் குமார், ஜெகதீசன் அபாரம்

சேலம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலம் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சேலத்தில், நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலம், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
சேலம் அணிக்கு ஹரி நிஷாந்த், கேப்டன் அபிஷேக் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 8.1 ஒவரில் 63 ரன் சேர்த்த போது, ஹரி நிஷாந்த் (31) அவுட்டானார். அபிஷேக் 38 பந்தில் 47 ரன் எடுத்து திரும்பினார்.
ஒரு கட்டத்தில் 76 ரன்னுக்கு 1 விக்கெட் என்றிருந்த சேலம் அணி, அடுத்து 28 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. பின் சன்னி சாந்து (30), முகமது சற்று கைகொடுக்க, ஸ்கோர் 150 ரன்களை கடந்தது. சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்தது. முகமது (28), கார்த்திக் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
சேப்பாக்கம் சார்பில் பிரேம் குமார் 3 விக்கெட் சாய்த்தார்.
எளிய வெற்றி
சேப்பாக்கம் அணிக்கு ஆஷிக், மோகித் ஹரிஹரன் (32) ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆஷிக் 36 பந்தில் 56 ரன் எடுத்து அவுட்டானார். அனுபவ விஜய் சங்கர் (2) நிலைக்கவில்லை. ஜெகதீசன் 25 பந்தில் 50 ரன் எடுக்க, வெற்றி எளிதானது. சேப்பாக்கம் அணி 16.3 ஓவரில் 162/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சொந்தமண்ணில் விளையாடிய சேலம் அணி, தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோற்றது.

Advertisement