புதிய ரேஷன் கடை திறப்பு விழா

கடலுார்: கடலுார் முதுநகர், மாலுமியார் பேட்டையில் புதிய ரேஷன் கடை கட்டடத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
கடலுார் முதுநகர், மாலுமியார் பேட்டையில் 14லட்ச ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. கடலுார் அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்று புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் ஜெயக்குமார், கள அலுவலர் சங்கீதா, கூட்டுறவு சார்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) தன்ராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் செயலாளர் புருஷோத்தமன், ஆதி பெருமாள், ராஜசேகர், சுதாகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம், சரத், பாரூக் அலி, முன்னாள் கவுன்சிலர் கோமதி சம்பத், கலைமணி, பரந்தாமன், பாபு, பிரகாஷ்ராஜன், கண்ணன், சீனு உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
9 நாளாக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு டாக்டர்கள் 7 பேர் கைது
-
பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மறு வாழ்வு திட்டம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம், 16 பவுன் சுருட்டல் பெண் கூட்டாளியுடன் போலி சாமியார் கைது
-
அமராவதி ஆற்றில் சட்டவிரோத குவாரி; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
-
புதுச்சேரியை ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற திட்டம்
-
ராணுவ அமைச்சர் தலைமையில் திருச்சியில் ஜூன் 30ல் குறைதீர் கூட்டம்; முன்னாள் படை வீரர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்