முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் உறுதிமொழி ஏற்பு

கரூர், புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.


முதுநிலை மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன் தலைமை வகித்தார். முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் என, உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், துணை மேலாளர் சதிஷ், விழிப்புணர்வு அலுவலர் தேவநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement