வயல்களில் சின்ன வெங்காயம் களை எடுக்கும் பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சிவாயம், பாப்பகாப்பட்டி, கருப்பத்துார் ஆகிய கிராமங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. விளை நிலங்கள் சமன்படுத்தப்பட்டு, விதை வெங்காயம் விவசாய நிலங்களில் நடவு செய்யப்படுகிறது. நடவு வெங்காயத்திற்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்
படுகிறது. சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்ட வயல்களில் களைகள் வளர்ந்து வருகிறது. அதை அகற்றும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில், 40 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி
நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement