பங்கு சந்தை நிலவரம்

மூன்றாவது நாளாக சரிவு



பங்கு சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் நேற்று சிறிய இறக்கத்துடன் நிறைவு செய்தன. இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்,
உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக நேற்று வர்த்தகம் துவங்கிய போதே, இந்திய சந்தைகுறியீடுகள் சரிவுடன் துவங்கின.


தொடர்ந்து, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்தது. இதனால், இந்திய ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படலாம்
என்பதால், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், சந்தை குறியீடுகள் ஊசலாட்டத்துக்கு சென்றன. முடிவில், மூன்றாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் இறக்கத்துடன்நிறைவடைந்தன.

உலக சந்தைகள்



புதனன்று அமெரிக்க சந்தைகள் கலவையுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்த வரை, ஜப்பானின் நிக்கி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹாங்சேங்
குறியீடுகள் சரிவுடனும்; தென்கொரியாவின் கோஸ்பி குறியீடு உயர்வுடனும் முடிவடைந்தன. ஐரோப்பியசந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.

சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)



அதானி போர்ட்ஸ் 2.52
பஜாஜ் பைனான்ஸ் 2.29

ஸ்ரீராம் பைனான்ஸ் 2.08

உயர்வு கண்ட பங்குகள் -- நிப்டி (%)



டாடா கன்ஸ்யுமர் 2.14
ஐச்சர் மோட்டார்ஸ் 1.71

மஹிந்திரா அண்டு மஹிந்திரா 1.58

சரிவுக்கு காரணங்கள்



1இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்து வருவது.
2அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்தது.
3முன்னணி நிறுவன பங்குகளை வாங்க

முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாதது.

அன்னிய முதலீடு



அன்னிய முதலீட்டாளர்கள் 935 கோடி ரூபாய்க்கு பங்குகளை, நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்



உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.26 சதவீதம் அதிகரித்து, 76.90 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு



அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 30 பைசா சரிந்து, மூன்று மாதங்களில் காணாத அளவுக்கு 86.73 ரூபாயாக இருந்தது.

Advertisement