ரூ.2 கோடிக்கு திட்டப்பணிகள் காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்

எரியோடு: எரியோடு பேரூராட்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் துவங்கி வைத்தார்.

எரியோடு பேரூராட்சியில் ரூ.65 லட்சத்தில் கொங்கர் குளத்திற்கு தார் ரோடு, ரூ.27 லட்சத்தில் குரும்பபட்டி களத்து வீடுகளுக்கு தார் ரோடு, ரூ.25 லட்சத்தில் வடமதுரை அய்யலுார் இணைப்பு ரோடு, ரூ.18 லட்சத்தில் மரவபட்டி மயான ரோடு பணிகளுக்கு பூமி பூஜை, அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.22 லட்சத்தில் சுகாதார வளாகம், ரூ.15 லட்சத்தில் மகாலட்சுமி நகர் பூங்கா, எம்.பி., நிதியில் வடக்குத் தெருவில் ரூ.17 லட்சத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி திறப்பு விழா நடந்தன. தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமிகார்த்திகேயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, நகர செயலாளர் செந்தில்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வர்த்தகஅணி துணை அமைப்பாளர் பண்ணை கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் நிர்மலா, பி.டி.ஏ., தலைவர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர்.

Advertisement