வால்பாறையில் பயங்கரம்; சிறுத்தை துாக்கிச்சென்ற சிறுமி உடல் மீட்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட்டில் சிறுத்தை துாக்கிச்சென்ற சிறுமியை, 14 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் சடலமாக மீட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த, அவர்களது ஐந்து வயது மகள் ரோஸ்லிகுமாரியை, சிறுத்தை கவ்விச் சென்றது. சிறுமியில் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர் ஓடி வருவதற்குள், வனப்பகுதிக்குள் சிறுமியை இழுத்து சென்றது.
சிறிது தூரத்தில் சிறுமியின் ஆடைகள் மட்டும் கிடைத்தது. சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது, சிறுத்தை துாக்கிச்சென்ற சிறுமியை, 14 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் சடலமாக மீட்டனர்.
சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்; வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தொழிலாளர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (3)
yts - ,
21 ஜூன்,2025 - 15:45 Report Abuse

0
0
Reply
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
21 ஜூன்,2025 - 13:42 Report Abuse

0
0
Jocker Political - Abu Dhabi,இந்தியா
21 ஜூன்,2025 - 14:24Report Abuse

0
0
Reply
மேலும்
-
மின்சார வாகனம் மீது பயணிகள் பஸ் மோதி விபத்து: நேபாளத்தில் 7 பேர் உயிரிழப்பு
-
அபாய அறிவிப்பு வெளியிட்ட இண்டிகோ விமானம்; பெங்களூருவில் அதிர்ச்சி
-
ஓசூரில் மேம்பால இணைப்பில் திடீர் விரிசல்; வாகன போக்குவரத்து நிறுத்தம்
-
இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானை உலுக்கிய 2 நிலநடுக்கங்கள்!
-
அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்; அன்புமணி குற்றச்சாட்டு
-
'பென்ஸ்' கார்களில் தீ பிடிக்கும் அபாயம்: 30 கார்களை திரும்ப பெற முடிவு
Advertisement
Advertisement