2 சீட்டு கொடுத்தால் தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., தொடருமா? திருமாவுக்கு நயினார் கேள்வி

திருநெல்வேலி: ''தி.மு.க., இரண்டு சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா?'' என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், திருமால் நகரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: மத்திய அரசு யாரையும்
வஞ்சிக்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி தமிழை வைத்து தமிழக அரசு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழுக்காக வாழும் ஒரே தலைவர் பிரதமர் மோடி.
தி.மு.க., கூட்டணியில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும். கூட்டணியில் சீட்டு குறித்து பிரச்னை இல்லை. கூட்டணியில் தொடர்வோம் என திருமாவளவன் சொல்கிறார். அப்படி என்றால் ஏதோ பிரச்னை உள்ளது என்பதை காட்டுகிறது. தி.மு.க., இரண்டு சீட்டு கொடுத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் தொடருமா?
நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வாருங்கள் என சொல்ல முடியாது. பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
@quote@தேர்தலுக்கு இன்னும் பத்து மாத கால அவகாசம் உள்ளது. பா.ஜ., கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்து வருகிறது. quoteதமிழகத்தில் தேர்தல் வரப்போகிறது. ஆளுங்கட்சி தமிழக மக்களுக்கு என்னென்ன செய்து உள்ளது என்பதை தெளிவுபடுத்தி ஓட்டு கேட்க வேண்டும்.
ஆனால் எதிர்க்கட்சியின் கூட்டணி குறித்து அவர்கள் பேசி வருகிறார்கள். தமிழக அரசு எதிர்க்கட்சி கூட்டணி குறித்து பேசுவது புலி வருது புலி வருது என சொல்வதை போல் உள்ளது. பிரதமர் வந்து தமிழகத்தில் பார்க்கக்கூடிய வேலைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பார்த்துக் கொள்வார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.










மேலும்
-
அபாய அறிவிப்பு வெளியிட்ட இண்டிகோ விமானம்; பெங்களூருவில் அதிர்ச்சி
-
ஓசூரில் மேம்பால இணைப்பில் திடீர் விரிசல்; வாகன போக்குவரத்து நிறுத்தம்
-
இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானை உலுக்கிய 2 நிலநடுக்கங்கள்!
-
அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்; அன்புமணி குற்றச்சாட்டு
-
'பென்ஸ்' கார்களில் தீ பிடிக்கும் அபாயம்: 30 கார்களை திரும்ப பெற முடிவு
-
ஈரான்-இஸ்ரேல் விவகாரம்: டில்லியில் தமிழர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு