மல்யுத்தம்: இந்தியா சாம்பியன்

உங் டாவ்: வியட்நாமில் 17, 23 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. 23 வயது பிரிவில் போட்டிகள் நடந்தன. இந்திய சார்பில் பங்கேற்ற பிரியான்ஷி (50 கிலோ), ரீனா (55), சிர்ஷ்டி (68), பிரியா மாலிக் (76) என நான்கு வீராங்கனைகள் தங்கம் கைப்பற்றினர். தவிர, நேஹா (57), தான்வி (59), பிரகதி (62), ஷிக்சா (65), ஜோதி (72) என 5 வீராங்கனைகள் பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தன.
ஒட்டுமொத்தமாக இந்திய பெண்கள் அணி 4 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் என களமிறங்கிய 10 பிரிவிலும் பதக்கம் கைப்பற்றி, ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.
ஆண்கள் பிரிவு 61 கிலோ பைனலில் இந்தியாவின் நிகில் 7-2 என, கஜகஸ்தானின் பஜர்பயேவை சாய்த்து தங்கம் கைப்பற்றினார். தவிர சுஜீத் (65), ஜெய்தீப் (74), சந்தர்மோகன் (79), சச்சின் (92), விக்கி (97) என மொத்தம் 6 வீரர்கள் தங்கம் கைப்பற்றி, சாம்பியன் கோப்பை வசப்படுத்தினர்.
மேலும்
-
தி.மு.க., அணியில் புகைச்சல்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தனி பதிவெண் தர வேண்டும் பல இடங்களில் மருந்து வாங்குவதால் அரசுக்கு இழப்பு
-
தொழில்துறை தமிழகத்தில் சிக்கி சீரழிந்து வருகிறது புள்ளிவிபரங்களுடன் அ.தி.மு.க., குற்றச்சாட்டு
-
செயின் திருவிழாவில் சிறப்பு ஆபர் இன்று ஒருநாள் மட்டும்
-
டாடா ஸ்டீல் பென்சிங் போஸ்ட் அறிமுகம்
-
யோகாவை வாழ்வின் அங்கமாக கருத வேண்டும் கவர்னர் ரவி அறிவுரை