பெண் போலீஸ் தற்கொலை

பெரம்பூர், விழுப்புரத்தை சேர்ந்தவர் சுமதி, 30; பெண் போலீசான இவர், செம்பியம் காவலர் குடியிருப்பில், 2023ம் ஆண்டு முதல் வசித்து வந்தார். இவருடன் ஜெயலட்சுமி என்ற பெண் போலீஸ்காவலரும் நான்கு மாதமாக தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு ஜெயலட்சுமியிடம், துணி காய வைத்து விட்டு வருவதாக கூறி சென்ற சுமதி, வெகுநேரமாகியும் வரவில்லை. வீட்டின் வெளியே வந்து ஜெயலட்சுமி பார்த்தபோது, வீட்டின் ஹாலில் சுமதி துாக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அருகில் உள்ளவர்கள் துணையுடன் சுமதியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ரெட்டேரியில் உள்ள மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி இறந்தார். சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கையில், சுமதியின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதில் விருப்பமில்லாத சுமதி தற்கொலை செய்தது தெரியவந்தது.