70 நிலுவை மனுக்களுக்கு தீர்வு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் டி.எஸ்.பி., எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

உசிலம்பட்டி டவுன், தாலுகா, எழுமலை, எம்.கல்லுப்பட்டி, டி.ராமநாதபுரம் ஸ்டேஷன்களில் இருந்த 120 நிலுவை மனுக்கள் விசாரிக்கப்பட்டன. 70 மனுக்களுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. 5 மனுக்களுக்கு நீதிமன்றத்தில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.

Advertisement