புதிய தொழில் பூங்காக்களை விரைந்து அமைக்க அறிவுறுத்தல்

சென்னை:கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கும் பணியை விரைவாக முடித்து, தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு, தொழில் துறை அதிகாரிகளை, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்திஉள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழில் துறையின் கீழ் இயங்கும் சிப்காட், வழிகாட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில், 20 அறிவிப்புகள் சட்டசபையில் வெளியிடப்பட்டன.
மற்றும் கடந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்து, முதல்வர் ஸ்டாலின் விரிவாக கேட்டறிந்தார்.
புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு, இரு மாதங்களுக்குள் அரசிடம் ஒப்புதல் பெற்று அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும், புதிய தொழில் பூங்காக்களை விரைவாக அமைத்து, தொழில் நிறுவனங்களுக்கு மனைகளை ஒதுக்கீடு செய்யுமாறும் அறிவுறுத்தினார்.
தொழில்துறை சார்பில் அமைக்கப்படும் கட்டுமான பணிகளை, வரும் ஜனவரிக்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தினார். அதற்கு ஏற்ப, புதிய தொழில் பூங்கா உள்ளிட்ட ஏழு அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கு, விரைவில் அரசாணை பிறப்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சின்ன சேலம்: 450 ஏக்கர்
தென்காசி: 150 ஏக்கர்,
சிவகங்கை: 100 ஏக்கர்
வேலுார்: 250 ஏக்கர்
திருப்பத்துார்: 125 ஏக்கர்