பள்ளி கல்லுாரி செய்தி
யோகா தினம்
மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி., நகர் அரசு பள்ளியில் சர்வதேச யோகா தினம் தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் ராஜவடிவேல் வரவேற்றார். ஆசிரியர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர் சுரேந்திரன் பல்வேறு ஆசனங்களை செய்து அதன் நன்மைகளை விளக்கினார். மாணவர்களும் ஆசனங்கள் செய்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.
* மதுரை மாயாண்டிபட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் திவ்யநாதன் தலைமை வகித்தார். மாணவர்கள் யோகா உறுதிமொழியேற்றனர். 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு வகை ஆசனங்களை செய்தனர். உடற்கல்வி ஆசிரியை சுகந்தி இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை அல்அமீன் மேல்நிலை பள்ளியில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.ஐ., அழகர்சாமி ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினார். மாணவர்கள் தங்கள் பெற்றோர், உறவினர்களிடமும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்குமாறு அறிவுறுத்தினார். மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். தலைமையாசிரியர் ஷேக்நபி, ஏட்டு மன்மதன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு
-
சிறுத்தை கவ்வி சென்ற சிறுமியின் சடலம் மீட்பு
-
சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து மாற்று உறுப்புக்காக 7,936 பேர் காத்திருப்பு!
-
டில்லி உஷ்ஷ்ஷ்: டிரம்ப் - முனீர் சந்திப்பில் நடந்தது என்ன?
-
ரகசிய பேச்சு: வைகோ சொல்வது இதுதான்!
-
இன்று இனிதாக திருப்பூர்