25 கிலோ கஞ்சா பறிமுதல்

அம்பத்துார்:அம்பத்துார் ரயில் நிலையம் அருகே, கஞ்சா விற்பனை நடப்பதாக, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று காலை ரயில் நிலையம் அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முரண்பாடாக பதிலளிக்கவே, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நிதின்குமார் ஷெட்டி, 31, என தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நேற்று மாலை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement