தலைமறைவு குற்றவாளிகள் பிடிபட்டனர்
சென்னை, பட்டினப்பாக்கம் போலீசார், 2018ம் ஆண்டு அடிதடி வழக்கில் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன், 53, என்பவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை, 23வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜாமினில் வெளியே வந்த ரங்கநாதன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தொடர்ந்து தலைமறைவானார். இதையடுத்து, ஜன., 21ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
பட்டினப்பாக்கம் போலீசார் தலைமறைவு குற்றவாளி ரங்கநாதன், 57, என்பவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
* அதேபோல, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கயர் நிஷா, 30, என்பவர், 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, ஜார்ஜ் டவுன் 7வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்த நிலையில், தலைமறைவான கயர் நிஷாவை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும்
-
அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தனி பதிவெண் தர வேண்டும் பல இடங்களில் மருந்து வாங்குவதால் அரசுக்கு இழப்பு
-
தொழில்துறை தமிழகத்தில் சிக்கி சீரழிந்து வருகிறது புள்ளிவிபரங்களுடன் அ.தி.மு.க., குற்றச்சாட்டு
-
செயின் திருவிழாவில் சிறப்பு ஆபர் இன்று ஒருநாள் மட்டும்
-
டாடா ஸ்டீல் பென்சிங் போஸ்ட் அறிமுகம்
-
யோகாவை வாழ்வின் அங்கமாக கருத வேண்டும் கவர்னர் ரவி அறிவுரை
-
திருநீறை அழிப்பது புரட்சி இல்லை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து