முருகன் மாநாட்டுக்கு பா.ஜ.,வினர் பயணம்

பழநி: பழநி பா.ஜ.,வினர் திருஆவினங்குடியில் இருந்து பூஜித்த வேலுடன் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்றனர் .

பழநி திருஆவினன்குடியில் பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் திரண்ட கட்சியினர் வேல் வைத்து பூஜை செய்தனர்.

அதன் பின் நகர தலைவர் ஆனந்த குமார், மாவட்ட பொருளாளர் ஆனந்த், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் குமார் உட்பட கட்சியினர் மாநாட்டுக்கு சென்றனர்.

Advertisement