யோகா பயிற்சி

பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச உலக யோகா தினத்தையொட்டி துாய்மை பணியாளர்களுக்கு யோகா மற்றும் மன வலிமை பயிற்சி நடந்தது.

நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். சுகாதார அலுவலர் கிருஷ்ணராஜ், சுகாதார உதவி ஆய்வாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தனர். மனவளக்கலை மன்ற ஆசிரியர்கள் பரிமளாரங்கன், புவனேஸ்வரி, பாலமுருகன், புருஷோத்தம்மன், மூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். நகர தி.மு.க., அவை தலைவர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement