சுற்றுலா பயணிகள் 'கொடை'யில் உற்சாகம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று விடுமுறையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர்.

இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலா தலங்கள், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசித்தனர். ஏரி சாலையில் சைக்கிள், குதிரை சவாரி, ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம், லேசான சாரல் மழை என ரம்யமான சூழல் நிலவியது.காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.

Advertisement