கோவை 'டாஸ்மாக்' அதிகாரிகள் மாற்றம்! 'தினமலர்' செய்தி எதிரொலி
கோவை : நமது நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியை தொடர்ந்து, கோவை மாவட்ட 'டாஸ்மாக்' அதிகாரிகள் மாற்றப்பட்டு, வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு அருகே செயல்படும் மதுக்கூடங்களில் (பார்கள்) சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்பட்டன. மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
ஆனால், அதிகாலை, 6:00 மணி முதல் சில இடங்களில், மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. 'பார்'களில் இருப்பு வைத்து, கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
'பார்'களில் மதுபானங்கள் இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது, 'டாஸ்மாக்' அதிகாரிகளின் பொறுப்பு. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.
விதிமுறையை மீறி செயல்பட்ட 'பார்'கள் தொடர்பாக, 14ம் தேதி நமது நாளிதழில் படங்களுடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. ஒவ்வொரு படமும் எந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்கிற தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த 'டாஸ்மாக்' அதிகாரிகள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள், மதுக்கடைகள் மற்றும் 'பார்'களில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
l வடக்கு மாவட்ட மேலாளராக பணியாற்றிய வாணிலட்சுமி ஜெகதாம்பாள், சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.l தெற்கு மாவட்ட மேலாளராக பணிபுரிந்த தணிகாஜலம், தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஜோதி சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.l தெற்கு தாலுகாவில் மாவுத்தம்பதி கிராமத்தில் செயல்படும், 'கால்ஸ் பீவரேஜஸ்' என்கிற மதுபானம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு கலால் மேற்பார்வை அலுவலராக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.l கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த, கலால் துணை ஆணையர் பணியிடத்துக்கு, கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு டி.ஆர்.ஓ., வாக பணியாற்றிய முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு
-
சிறுத்தை கவ்வி சென்ற சிறுமியின் சடலம் மீட்பு
-
சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து மாற்று உறுப்புக்காக 7,936 பேர் காத்திருப்பு!
-
டில்லி உஷ்ஷ்ஷ்: டிரம்ப் - முனீர் சந்திப்பில் நடந்தது என்ன?
-
ரகசிய பேச்சு: வைகோ சொல்வது இதுதான்!
-
இன்று இனிதாக திருப்பூர்