மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜென்ம தின வைபவம்



ராம்நகர், அய்யப்பன் பூஜா சங்கத்தில், ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிகளின், ஜென்ம தின வைபவம் நடக்கிறது. காலை, 7:30 மணி முதல் மகா சுவாமிகளின் சிறப்பு ஆஹ்னிகா தரிசனம், சகஸ்ரநாம பாராயணம், சண்டிகா ஹோமம், ஆயுஷ் ஹோம பூர்ணாஹூதி, அனுக்ரஹபாஷணம் நடக்கிறது. மாலை, 5:30 முதல் நாமசங்கீர்த்தனம், ஸ்ரீ சக்ர நவாவர்ண பூஜை நடக்கிறது.

மகாருத்ர யக்ஞம்



ராம்நகர், ராமர்கோவிலில், மகாருத்ய யக்ஞம் நடக்கிறது. காலை, 6:30 முதல் விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், மஹன்யாச ஜபம், ருத்ர ஆவாஹனம், ருத்ர ஜபம், ஏகாதச திரவிய ருத்ராபிஷேகம் நடக்கிறது. மதியம், 12:00 மணி முதல், வசோர்த்தாரை, தம்பதி பூஜை, கலாசாபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடக்கிறது.

தேர்த்திருவிழா



மேட்டுப்பாளையம், புனித அந்தோணியார் ஆலயத்தில், தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று நடக்கிறது. காலை, 8:15 மணி முதல் திருப்பலி, மறையுரை, கொடியேற்றம் நடக்கிறது.

கண்ணன் மோட்சம்



ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில் இன்று, மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை, 'கண்ணன் மோட்சம் தர்மர் பட்டாமபிஷேகம் ' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவாற்றுகிறார்.

கீதை உபதேசம்



டாடாபாத், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், சுவாமி தயானந்த சரவஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேசம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில் மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.

நாய்கள் கண்காட்சி



கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பில், 4வது அனைத்து பிரீட்ஸ் சாம்பியன்ஷிப் நாய்கள் கண்காட்சி நடக்கிறது. அவிநாசி ரோடு, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காலை, 11:00 மணி முதல் நடக்கிறது.

சமஸ்கிருத வகுப்புகள்



ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகின்றன.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்



ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.

Advertisement