தொழில்முனைவோர் உருவாக்கும் 'அமுதசுரபி'

திருப்பூரில் செயல்பட்டு வரும் பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்கள், லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புக்கு ஆதாரமாக விளங்குகின்றன. இங்குள்ள இளைஞர்கள் பலர், சுய வேலைவாய்ப்புக்கு முனைப்பு காட்டுகின்றனர். வேலைவாய்ப்புக்கு முயற்சிப்போருக்கும், தொழில்முனைவோருக்கும் உதவிகரமாக விளங்குகிறது, திருப்பூர் - முதலிபாளையத்தில் செயல்படும், கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்.
இலவச உணவு, தங்கும் விடுதி
இதன் இயக்குனர் சதீஷ்குமார் நம்முடன் பகிர்ந்தவை:
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் முற்றிலும் இலவசமாக உணவு மற்றும் தங்கும் வசதியுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
64 துறைகளில் பயிற்சி
அதிக வேலைவாய்ப்புள்ள பயிற்சிகளான, மொபைல் போன் சர்வீஸ், வீட்டு உபயோக மின்சாதனங்கள் சர்வீஸ், நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி, கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, நவீன உட்புற மற்றும் மர வடிவமைப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி, இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல் பயிற்சி, அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் மற்றும் பேப்ரிகேஷன் பயிற்சி மற்றும் பிற தொழில் சார்ந்த பயிற்சிகள் மற்றும் விவசாய பயிற்சிகள் என 64 துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், எந்த கட்டணமும் இல்லை. இதில், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட கிராமப்புற ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி போதும். கல்வித் தகுதிக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சிகள் துறை வாரியாக, 10 முதல் 45 நாள் வரை நடைபெறும். பயிற்சி காலத்தில், உணவு, தங்கும் வசதி, காலை மற்றும் மாலை இரு வேளையும் சிற்றுண்டி மற்றும் தேநீர் ஆகியனவும் வழங்கப்படுகிறது.
அனுபவப் பயிற்றுனர்க ள்
தற்போது சீருடை, பாடப்பொருள், தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சிகளை உரிய தொழில் சார்ந்த அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள் நடத்துகின்றனர். பயிற்சி காலத்தில், தொழில் நிறுவனங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் வெற்றி கதைகள் விளக்கப்படுகின்றன.
மானிய கடனுதவி
இளைஞர்களை குழுவாக அழைத்துச் சென்று சந்தை ஆய்வுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த இளைஞர்கள் சுய வேலைவாய்ப்புக்காக கடன் தேவைப்படும் நிலையில், வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் அரசு மானியத்துடன் கூடிய கடன் பெறவும் ஏற்பாடு செய்யப்படும். சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.
இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்
இம்மையம் துவங்கியது முதல், இதுவரை, 12,371 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இதுவரை, 404 சிறுதொழில் மற்றும் விவசாய பயிற்சிகள் நடந்துள்ளது. இவர்களில், 8,438 பேர் சுயதொழில் துவங்கி செய்து வருகின்றனர்.
இதுதவிர, 2,336 பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. குறிப்பாக, 5,241 பேர் வங்கிக் கடன் பெற்று சுய தொழில் செய்து வருகின்றனர். பயிற்சியில் சேர விரும்பும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 'இயக்குனர், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர் - 641606' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை 94890 43923 , 99525 18441, 86105 33436 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
64பயிற்சி வழங்கப்படும் துறைகள்18 - 45கிராமப்புற ஆண், பெண்பயிற்சி பெறும் வயது10 - 45பயிற்சிக்காலம் (நாட்களில்)12,371இதுவரைபயிற்சி பெற்றவர்கள்404இதுவரை நடந்தசிறுதொழில் மற்றும்விவசாய பயிற்சி8,438பயிற்சி பெற்றுசுயதொழில் செய்வோர்2,336வேலைவாய்ப்பு பெற்றவர்கள்5,241வங்கி கடன் பெற்றுசுய தொழில் செய்வோர்
மேலும்
-
ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை
-
ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்
-
அப்பவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம்: அணுசக்தி நிலைய தாக்குதல் பற்றி சொல்கிறது ஈரான்
-
திருவாலங்காடு தேர் மண்டபத்திற்கு பலகை அமைக்கும் பணி மும்முரம்
-
நெரிசலில் சிக்கிய கலெக்டர் இனியாவது தீர்வு கிடைக்குமா?
-
சாலை மைய தடுப்புச்சுவர் மீண்டும் அமைக்கப்படுமா?