கூடுதல் நேரம் மின் நிறுத்தம்

பல்லடம் : மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளின் போது, மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். பல்லடம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, பல்லடம், வடுகபாளையம் புதுார் அனுப்பட்டி, பனிக்கம்பட்டி சித்தம்பலம், மாதப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று மணி நேரத்துக்கு மேல் தாமதமாக, இரவு, 7.30 மணிக்கே மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதனால், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் திட்டமிட்டபடி பணிகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்பட்டது. காலை, சரியான நேரத்துக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் நிலையில், மாலை, குறித்த நேரத்துக்கு மின்வினியோகம் வழங்கப்படுவதில்லை.

Advertisement