நீதிபதிகள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகாசனப் பயிற்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் தலைமை வகித்தார். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகனவள்ளி முன்னிலை வகித்தார்.

மனவளக்கலை தவ மைய பயிற்சியாளர் முத்துக்குமார், அரசு மருத்துவமனை ஆயுஷ் மருத்துவ துறை தலைவர் திவான் மொய்தீன் ஆகியோர் பயிற்சியளித்தனர். நீதிபதிகள் ஸ்ரீதர், பிரபாகர், செல்லதுரை, கண்ணன், நதியா பாத்திமா, தனலட்சுமி, வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

Advertisement