யானை தந்தங்களை விற்க முயன்ற வன ஊழியர் உட்பட 5 பேர் கைது

வால்பாறை: வால்பாறை அருகே, இறந்த யானையின் தந்தங்களை விற்க முயன்ற, வனத்துறை தற்காலிக ஊழியர் இருவர் உட்பட, ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் இறந்த யானையின் தந்தங்களை திருடி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன், வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான, வனக்குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதில், வால்பாறை அருகே தாய்முடி என்.சி., பகுதியில் இரண்டு தந்தங்களை விற்க முயன்ற, அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன்,47, ராஜா, 39, தேவபாலா,31 ஆகிய மூவரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து, ஐந்தடி நீளம் உள்ள, இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றி வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், வனத்துறையில் அய்யர்பாடி பீட்டில் வேலை செய்து வந்த தற்காலிக வனஊழியர்கள் பிரேமதாஸ்,29, ராமர்,35, ஆகியோருக்கும் தொடர்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஐந்து பேரையும் வனத்துறையினர் கைது செய்து, மானாம்பள்ளி வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் மீது, இறந்த யானையின் தந்தங்களை திருடியது, அதை விற்க முயன்றது உள்ளிட்ட வனச்சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மணிகண்டன் என்பவர் கடந்த, 2021ம் ஆண்டு இதே குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
சர்வதேச சட்டத்தை மீறிய செயல்; அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் அணுசக்தி அமைப்பு கண்டனம்
-
ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது; ஐ.நா., கவலை
-
ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்: டிரம்ப்
-
அப்பவே பாதுகாப்பாக அகற்றி விட்டோம்: அணுசக்தி நிலைய தாக்குதல் பற்றி சொல்கிறது ஈரான்
-
திருவாலங்காடு தேர் மண்டபத்திற்கு பலகை அமைக்கும் பணி மும்முரம்
-
நெரிசலில் சிக்கிய கலெக்டர் இனியாவது தீர்வு கிடைக்குமா?