கஞ்சா பறிமுதல்

திருப்பூர்: கொடுவாய், செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஊதியூர் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.

அப்பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக, பாண்டிமுருகன், 45 என்பவரிடம் விசாரித்தனர். வெளியூர்களில் இருந்து கஞ்சா பெற்று வந்து விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்து, மூன்று கிலோ கஞ்சாவை ஊதியூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement