நாய்கள் சாம்பியன்ஷிப் போட்டி

கோவை: கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பில், மூன்றாவது மற்றும் நான்காவது, அனைத்து இன நாய்கள் சாம்பியன் ஷிப் நடத்தப்பட்டது.

கோவை, இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியின் ஆடிட்டோரியம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஜெர்மன் ஷெப்பர்டு, பெல்ஜியம் ஷெப்பர்டு, டாபர்மென், க்ரேட் டே, பொமேரியன், டெரியர், கோல்டன் ரெட்ரீவர், சவ்சவ், டால்மேஷன், மெக்கன்சீஸ், பிச்சான் ப்ரைஸ், கோம்பை, கன்னி, சிப்பிப்பாறை என, 50 வகைகளில், 300க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

இதில், மைனர் பப்பி, பப்பி, ஜூனியர், இன்டர் மீடியட், ஓபன் கிளாஸ், சாம்பியன் என, ஒவ்வொரு பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. தகுதி வாய்ந்த சர்வதேச நடுவர்களான கிருஷ்ணமூர்த்தி, ஷரத் ஷர்மா, அஞ்சலி வைத் ஆகியோர், நாய்களின் அசைவு, நடத்தை, செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர்.

தமிழகம் மட்டுமன்றி, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்றனர். ஒன்றாவது முதல் எட்டாவது வரையான இடங்களுக்கு, கோப்பை, வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும், கண்காட்சியின் சிறந்த நாய்க்குட்டி, சிறந்த இந்திய இனம், இந்தியாவில் பிறந்த கண்காட்சியின் சிறந்த நாய், கண்காட்சியின் சிறந்த கையாளுநர் என்ற தலைப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

சாம்பியன் ஷிப் போட்டியை, கோவை மான்ஸ்செஸ்டர் கென்னல் கிளப் தலைவர் தனுராய், துணை தலைவர் மகேஷ், செயலாளர் சரவணன் உட்பட நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

Advertisement