அடையாறில் 600 கிலோ குட்கா பறிமுதல்

அடையாறு:அடையாறு காவல் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார், அடையாறு, எல்.பி., சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஒரு சிறிய வகை லோடு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.

அதில், 600 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில், துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரன், 37, பட்டுராஜ், 31, என தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், 600 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement