சிறுவன் கடத்தல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், திருவள்ளூர் மாவட்ட போலீசாரிடம் இருந்த ஆவணங்களை பெற்று, விசாரணையை துவக்கி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தனுஷும், 23; தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீயும்,21 காதல் திருமணம் செய்தனர்.
இவர்களை பிரிக்க, தனுஷ் தம்பி கடத்தப் பட்ட விவகாரத்தில், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களிடம், திருவள்ளூர் மாவட்ட டி.எஸ்.பி., தமிழரசி தலைமையில், திருவாலங்காடு போலீசார் விசாரித்து வாக்குமூலம் பெற்று உள்ளனர். கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற முடியாது' என்று தெரிவித்தனர்.
உடன், சிறுவன் கடத்தல் வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போன்ற அமைப்புகள் விசாரிக்கலாமே என, நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு, அரசின் சார்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இதுவரை கைதானவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலம் போன்ற விபரங்களை, திருவாலங்காடு போலீசாரிடம் பெற்று, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
மேலும்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
-
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!
-
தக்கைப் பூண்டு விதை விலை உயர்வால் விவசாயிகள் அவதி
-
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
-
நிர்வாகிகள் தேர்வு