பொது// சிங்கிள் காலம் ஆட்டோ திருடன் சிக்கினான்

அயனாவரம்:வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கர், 56. இவர், அயனாவரம், ராஜூ தெருவில், ஆட்டோ கன்சல்டன்சி சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு விற்பனைக்காக வந்த ஆட்டோவை, கடந்த 19ம் தேதி கடையின் வெளியில் நிறுத்தியுள்ளார்.
மறுநாள் காலை பார்த்தபோது, ஆட்டோவை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அயனாவரம் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, போரூர் அருகில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதித்தனர். விசாரணையில், திருவேற்காடைச் சேர்ந்த மணிகண்டன், 29, என்பதும், அயனாவரத்தில் ஆட்டோவை திருடி சுற்றி வந்ததும் தெரிந்தது. போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து, அயனாவரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின், மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
-
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!
-
தக்கைப் பூண்டு விதை விலை உயர்வால் விவசாயிகள் அவதி
-
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
-
நிர்வாகிகள் தேர்வு
Advertisement
Advertisement