பொது// பைக் திருட்டு 4 பேர் கைது

திருவொற்றியூர்":திருவொற்றியூர், டி.எஸ்.ஆர்., நகர் ஒற்றவாடை தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 24. கடந்த 8ம் தேதி இரவு, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது யமஹா பைக் திருட்டு போனது.
விசாரித்த திருவொற்றியூர் போலீசார், பொன்னேரியைச் சேர்ந்த சாரதி, 20, சூர்யா, 23, ரிஷி கேசவன், 23, விஜய், 19, ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்தனர். விசாரணையில், சாரதி, சூர்யா மற்றும் தலைமறைவாக உள்ள அருண் ஆகிய மூவரும் சேர்ந்து, பைக்கை திருடி வந்து ரிஷி கேசவனிடம் விற்றுள்ளனர்.
ரிஷிகேசவன் தன் நண்பர் விஜய்யுடன் சேர்ந்து, பைக்கின் பாகங்களை கழற்றி வேறு பைக்கில் பொருத்தியதும் தெரியவந்தது.
அருணை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
-
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!
-
தக்கைப் பூண்டு விதை விலை உயர்வால் விவசாயிகள் அவதி
-
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
Advertisement
Advertisement