சிறுவாணி அடிவாரத்தில் 4 மி.மீ., மழை பதிவு

கோவை: கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி என்ற நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, 44 அடி வரை மட்டுமே கேரள அரசு நீர் தேக்க அனுமதித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இம்மாத துவக்கத்தில் நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 4 மி.மீ., மழை பெய்ய நீர் மட்டமானது, 40.34 அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, 6.6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement