ரத்தினம் கல்லுாரியில் ஹெல்த்கேர் ஹேக்கத்தான்

கோவை: ரத்தினம் பார்மசி கல்லுாரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, ஸ்டார்ட்- அப் டி.என்., ஏ.பி.டி.ஐ., தமிழ்பாடு பிரிவு மற்றும் டி.என்.பி.பி.சி.ஏ., - எச்.எஸ்., ஆகியவை இணைந்து, ஷைன் ஹெல்த்கேர் ஹேக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தின.

மருத்துவ ஆராய்ச்சி மற்றும் ஸ்டார்ட்-அப் முயற்சிகளில் ஈடுபாடை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்தது. ஆக்கம் 360 மோகன், ஸ்டார்அப் டி.என்., ராஜசேகரன், ஆக்கம் ஷைன் தனபிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இவர்கள், சுகாதார துறையில் புதிய கண்டுபிடிப்புகள், வாய்ப்புகள் மற்றும் புதுமையான எண்ணங்களை நடைமுறை தீர்வுகளாக மாற்றும் முறை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். கேள்வி பதில்கள் மற்றும் கருத்து பரிமாற்றம் அமர்வில் மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

ரத்தினம் கல்லுாரி பார்மசி முதல்வர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement