'கொஜினா' 2025-27ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவை: கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்கத்தின்(கொஜினா), 2025-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி, காளப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சங்க முன்னாள் செயலாளர் நாகேந்திரகுமார் வரவேற்க, உடனடி முன்னாள் தலைவர் ராஜதுரை தலைமை வகித்தார்.
2025-27ம் ஆண்டிற்கான புதிய தலைவராக பழனிச்சாமி, துணை தலைவராக தாமோதரசாமி, செயலாளராக செந்தில்நாதன், பொருளாளராக சுந்தரராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன் பேசுகையில்,''பொறியாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு தீர்வுகாணஅரசானது 'இன்ஜினியர்ஸ் பில்' குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.
அகில இந்திய கட்டுனர் சங்க உடனடி முன்னாள் தலைவர் விஸ்வநாதன் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். காவேரி குழுமங்களின் ஜே.எம்.டி., வினோத் சிங் ரத்தோர், சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் ஜெயவேல், மக்கள் தொடர்பு அலுவலர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
வேலுார் பென்லேன்ட் மருத்துவமனையை நாளை மறுநாள் திறக்கிறார் முதல்வர்; டாக்டர், நர்ஸ் நியமனம் இன்றி 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எப்படி?
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
ஹோர்முஸ் நீரிணை மூடல்; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு பாதிப்பா? உண்மை நிலவரம் இதோ!
-
அரசு மருத்துவமனையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை