அணையில் குளிக்க இறங்கிய இரு மாணவர்கள் மாயம்
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் புதுநகரம் பகுதியைச் சேர்ந்த மோகனின் மகன் கார்த்திக் 18, சித்தூர் அணிக்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜனின் மகன் விஷ்ணு பிரசாத் 18.
பிளஸ் 2 மாணவர்களான இவர்கள், நண்பர்களுடன் நேற்று மதியம் மீனாட்சிபுரம் அருகே உள்ள கம்பாலத்தறை அணையை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
அணையில் நண்பர்களுடன் குளிக்க இறங்கிய இவர்கள், தாழ்வான பகுதியில் சிக்கிக் கொண்டு மூழ்கி மாயமாகினர். இதைக்கண்ட நண்பர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், நீண்ட நேரம் தேடியும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த சித்தூர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அணையில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம்; காற்றில் கலந்து பக்தி மணம் பரப்பியது கந்தன் நாமம்
-
முருக பக்தர்கள் மாநாடால் அரசியல் மாற்றம் உறுதி தமிழிசை நம்பிக்கை
-
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!
-
தக்கைப் பூண்டு விதை விலை உயர்வால் விவசாயிகள் அவதி
-
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
-
நிர்வாகிகள் தேர்வு
Advertisement
Advertisement