மகா விஷ்ணு கோவிலில் தாம்பூல பிரசன்ன ஆருடம்

பந்தலுார்: கூடலுார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் பந்தலுார் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ளது.

நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணி நடந்து வருகிறது. இது குறித்து தாம்பூல பிரசன்ன ஆருடம் கணிக்கும் பூஜைகள் நடந்தது. கோவில் அறங்காவலர் கதம்பன் நம்பூதிரிபாடு தலைமை வகித்தார்.

இவர் கொடுத்த வெற்றிலைகளின் எண்ணிக்கையை வைத்து, கிரக நிலைகளை ஆராய்ந்து கோவில் வளாகம் மற்றும் கோவிலில் உள்ள பிரச்னைகள் மற்றும் அவற்றை களைய வேண்டியதன் அவசியம் குறித்து கேரளாவை சேர்ந்த தர்மதாஸசுதீஷ், வைஷ்ணவ் ஆகியோர் பலன் கூறினர். அதில், பல்வேறு தகவல்கள் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களிடம் தெரிவிக்கப்பட்டது. 'கோவிலில் உள்ள ஆன்மிக பிரச்னைகளை முழுமையாக களைந்த பின்னர் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவக்கலாம்,' என, தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில் தந்திரி தனேஷ், மேல் சாந்தி சுதீஷ், மேலாளர் சந்தியா, பராமரிப்பு குழு நிர்வாகிகள் வினோத், புஷ்பாகரன் உள்ளிட்ட குழுவினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement