மரைன் போலீசார் வாகன சோதனை

சாயல்குடி: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லை சந்திப்பு சோதனை சாவடிகளில் மரைன் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர்.

சமீப காலமாக இலங்கைக்கு சட்ட விரோதமாக பொருட்கள் கடத்துவதை தடுக்கவும் இது போன்ற வாகன சோதனைகள் நடத்துவதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement