குமாரகுறிச்சி கும்பாபிேஷக செலவினம் விசாரிக்க புகார்

இளையான்குடி : இளையான்குடி அருகே குமாரகுறிச்சி காரீருடைய அய்யனார் கோயில் கும்பாபிேஷக செலவினம் குறித்து ஹிந்துஅறநிலையத்துறை விசாரணை நடத்த வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர்.

இக்கோயிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது. இதற்காக ரூ.89லட்சம் வரை நன்கொடையாக பெறப்பட்டது. இந்நிதியை வசூல் செய்த நிலையில் அறநிலையத்துறை அனுமதியை மீறி ஆலய திருப்பணி, பராமரிப்பு பணிகளை செய்ததோடு, சுவாமி சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். நன்கொடை வசூலித்த தொகை குறித்து உள்ள கணக்கு விபரங்கள் பற்றிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

///

Advertisement