குளத்தில் மண் அள்ள எதிர்ப்பு

பழநி : பழநி அய்யம்புள்ளி குளத்தில் பாசனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் உள்ளது.

தற்போது குளத்தில் சிலர் மண் அள்ளி வருகின்றனர். அங்கு அதிகப்படியாக மண் அள்ளுவதால் குளத்தின் கரைகள் சேதம் அடைகின்றன என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மண் அள்ளுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Advertisement