குப்பைகள் எரிந்து கேபிள் சேதம்

அரியாங்குப்பம் : ஆற்றுப்பாலத்தில் அருகே குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால், டிவி கேபிள் எரிந்து சேதமானது.கடலுார் சாலை இடையார்பாளையம் ஆற்றுப்பாலம் அருகே கிடந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் நேற்று தீ வைத்து சென்றனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால், பாலத்தின் ஓரப்பகுதியில் சென்ற டிவி கேபிள் தீயில் எரிந்தது. இதுகுறித்து, அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.குப்பைகளுக்கு தீ வைத்து சென்ற நபர்கள் யார் என, தவளக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement