உள்ளாட்சி பணியாளர் சம்மேளன கூட்டம்

தர்மபுரி: ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாவட்ட ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். ஊரக உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில பொருளாளர் ராஜேந்திரன், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணைத்தலைவர் மணி கோரிக்கைகள் குறித்து பேசினர்.


இதில், ஜூலை, 9 அன்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில், நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில், உள்ளாட்சி பணி-யாளர் சங்கம் சார்பில், பெரும் திரளாக பங்கேற்பது, உள்ளாட்சி பணியாளர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை, காப்பீடு, ஊதிய உயர்வு, மற்றும் காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை, 22 அன்று அனைத்து மாவட்டங்களிலும் காத்திருப்பு போராட்டம் நடக்கவுள்ளது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நடக்கும் போராட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

Advertisement