பா.ஜ., மாநாடுக்கு சென்ற பெண் மாரடைப்பால் பலி

ஆத்துார்: ஆத்துார், விநாயகபுரத்தை சேர்ந்த, பன்னீர்செல்வம் மனைவி கவிதா, 45. பா.ஜ., உறுப்பினரான இவர் நேற்று, மதுரை, மேலுாரில் நடந்த முருக பக்தர் மாநாட்டுக்கு, வேனில் சென்றார்.

அருகில் சென்ற நிலையில், நெஞ்சு வலியால் கவிதா மயங்கினார். அவரை, மேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரிந்தது.

Advertisement