எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்

சேலம்: சேலம், கருப்பூர், கரும்பாலை, எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நி-லைப்பள்ளியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.


அதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பல்வேறு வித யோகாசனங்களை செய்து காட்டினர். அதில் சிறப்பாக யோகா செய்த மாணவர்களை, பள்ளி தலைவர் ஆண்டியப்பன், பொருளாளர் பன்னீர்செல்வம், தலைமையாசிரியர் குமார் ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர். முன்னதாக சேலம் வாழ்க வளமுடன் அறக்கட்டளை பேராசிரியர் கோபாலன் பேசினார். எஸ்.எஸ்.ஆர்.எம்., யோகா ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., ஆசிரியர், உடற்பயிற்சி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement