ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கல்லால் அடித்து கொலை

ஸ்ரீபெரும்புதுார்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீரஜ்குமார், 30. இவர், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.
இவரது மனைவி காஜல் குமாரி, மகன் ஆரவ்குமார், 5. கடந்த 9ம் தேதி, ஆரவ்குமார் காணாமல் போனதை அடுத்து, சிறுவனின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை தேடிவந்த நிலையில், 15ம் தேதி அதே பகுதியில் உள்ள முட்புதரில் அழுகி நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
சிறுவன் காணாமல் போன தேதியன்று, அதே பகுதியில் தங்கியுள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போல்தேவ் என்பவர், சிறுவனை அழைத்து சென்றது, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவானது.இதையடுத்து, போலீசார் போல்தேவை நேற்று பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை, கல்லால் தலையில் அடித்து கொலை செய்து, முட்புதரில் வீசி சென்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, போலீசார் போல்தேவை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
-
திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே
-
கார் ஏறி தொண்டர் உயிரிழந்த சம்பவம்; ஆந்திர மாஜி முதல்வர் ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
-
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
-
கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்